Thursday, August 23, 2007

பக்தி

வீடு திருப்ம்பும் அவசரம்
நெரிசலான போக்குவரத்து
எரிச்சலூட்டும் மழை
சாலை வரி கட்டாத சாமி
உரிமையாய் சாலை மறித்து
ஊர்வலம் போகிறார்.
காத்திருந்தாக வேண்டியகட்டாயத்தில்
ஒற்றைக் காலூன்றிநிற்கும்
மோட்டார்பைக்காரர்
எதுவும் செய்ய இயலாத எரிச்சலில்
கடுகடுத்த முகத்தோடு
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்!

No comments: