Monday, March 17, 2008

இயலாதோர்

வயிற்றையோ மனதையோ,
சோற்றாலோ போதையாலோ
நிறைத்துவிட்டு
வருகிற நிமிடங்களில்
நீள்கிற கைகளுக்கு
இடப்படும்
ஒரு ரூபாய்,
ரத்தமோ,
உதவியோ கேட்டு வருகிற
இமெயில்களை வெறுமனே
இலவசமாய்
பார்வர்டு செய்தல்,
நடந்த
நடக்கிற
விபத்துகளை
எட்டி நின்று
பார்க்கிற வேளைகளில்,
நம் இரக்க சுபாவத்தை
பிறறிய வெளிப்படுத்துகிற
ஒரு "உச்....!"
இவையெல்லாம்
சேர்த்து குழைத்து
எனக்கும் தெரியுமாக்கும்
என்றுநீட்டி முழக்கிக் கொள்ளும்
சில கவிதைகள்,
போன்ற
ஆகப் புனிதமான கடமைகளை
ஆற்றுவதிலேயெ
ஆத்ம திருப்தி
அடைந்துவிடுகிறது,
களத்திலிறங்காமல்,
தள்ளியே நிற்கும்,
நம்
சகமனிதர் குறித்த
நம் சமூக அக்கறை!

Sunday, March 16, 2008

தேடிச் சோறு நிதந்தின்று........

உணவு உறைவிடம்
ஒரு துணை
என பிழைத்திருத்தலின்
தேவைகளே
உங்களின் லட்சியமாகுமென்றால்....................,
கனவு, லட்சியம்,
வாழ்க்கை
என்பதின்பொருளையாவது
அறிவீர்களா நீங்கள்?