Wednesday, February 25, 2009

பெஞ்ச் ப்ராஜெக்ட்

மரத்தின் வளர்ச்சிக்கே
உழைத்திருந்தாலும்,
தண்ணீருக்கு பஞ்சம் என்பதால்
உயிர்த்திருத்தலின் பொருட்டு,
இலைகளை உதிர்த்து,
வெறும் கிளைகளுடன்
நிற்கிறது
இலையுதிர்கால மரம்.
.
.
.
நான் இலையா? கிளையா?


தொலைத்தவர்கள்
கனிப்பொறியில்
அமிழ்ந்திருந்தேன்.
"வெளியே வாங்க மாமா,
விளையாடலாம்!" என்றாள்
இரண்டு வயது மருமகள்!

யாரை அழைத்திருப்பாள்?
என்னையா?
எனக்குள் இருந்திருந்த
மழலையையா?

Tuesday, February 24, 2009

இலையுதிர்கால
மரத்தடி இரவு.
கிளைகளில் நட்சத்திரங்கள்!