Friday, May 15, 2009

பூனைக்கு பயந்து........

குழந்தை கையிலிருந்த
கத்தியை பிடுங்கி
உயரமான இடத்தில்
வைத்த மாமியார்
மருமகளின் பொறுப்பின்மையை
கடிந்து கொண்டார்.
கொட்டிக் கிடந்த
குப்பையைக் கண்டதும்
இன்னும் கோபமாகி
முனுமுனுத்தவாறே
கூட்டித்தள்ளினார்.
எல்லாம் முடித்ததும்
குழந்தையை தூக்கி
மடியில் வைத்துக் கொன்டு
டீவியை போட்டுவிட்டாள்.

3 comments:

மாதவராஜ் said...

வெண்மணி!
எழுத்தாளர் மேலாண்மையின் மகன் தானே தாங்கள்? வாழ்த்துக்கள். கவிதை நல்லாயிருக்கு. கத்தியை விட டீ.வி மோசம் இல்லையா?

உங்கள் ஈ மெயில் முகவரி தரலாமா?

na.jothi said...

உண்மை தான் செல்வன்
தொலைக்காட்சிபெட்டிகள் slow poison

பொ.வெண்மணிச் செல்வன் said...

thanks J!