ஈரத்துணிகளை
வீட்டிற்குள் விரட்டிவிட்டு
கொடிக்கம்பியில்
மழைத்துளிகளை
காயப்போட்டுச் செல்கிறது
கார்மேகம்.
இரவுரயில்.
பொளர்னமி பார்க்க
வசதியில்லாத,
எதிர்பக்க இருக்கை.
ஏமாற்றத்தில்
தூங்கிப் போனேன்.
அதிகாலையில்
என்னை
வேடிக்கை பார்த்தபடி
நின்றது நிலா
என் ஜன்னலில்!
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment