Monday, January 7, 2013

கணினித்தமிழுக்கு
கைகள் வாழ்க்கைப்பட்டு  போனதால்,
வார்த்தைகளுக்கு இடையே மேல்நோக்கிய அம்புக்குறியிட்டு,
விடுபட்ட வார்த்தைகளை
இரு வரிகளுக்கும் இடையில்
நுணுக்கி எழுத,
அடுத்த டைரிக்குறிப்பு வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது!
மௌனத்தின் ஆழத்தில்
ஆவேசமாய் அலைகின்றன வார்த்தைகள்,
வாய் கட்டப்பட்ட
பாலிதீன் பையினுள்
நீந்துகின்ற மீன்களை போல...!